ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும்.
-மு.வ

மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது.
-மொரார்ஜி தேசாய்

ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
- நெப்போலியன்

இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
-கிருபானந்த வாரியார்.

துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது.
-விவேகானந்தர்.

உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
-ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தரும்.
- யாரோ.

ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்.
-யாரோ.

மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,ஆனால் மோசமான எஜமான்.
-சாக்ரட்டீஸ்.

உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
-பெனிலின்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
-மெஹர்பாபா.

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்.

நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? -என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்

படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
-மெக்காலே.

எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர. 
-குஷ்வந்த் சிங்.

அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
-சாக்ரடீஸ்.
_____________

இந்த நகைச்சுவை தோரணங்கள் மின் அஞ்சலில் வந்தது .......ரசித்து படித்தேன் அதனால் உங்கள் பார்வைக்கு ....


கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
குரங்குகளைப் பார்த்து,

கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!

மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.

------------------------------
--------------------------------------------------------------------------------

காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,

கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா
ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?

மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.

கணவன் : என்ன சொன்னே?

------------------------------
-----------------------------------------------------------------------------------

கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?

மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான்
முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.

------------------------------
------------------------------------------------------------------------------------------

நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.