ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்


நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.

நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.

அந்த அதிர்வுக்கும் விளைவுகள் உண்டு.

பிரபஞ்சம் அதற்கான விளைவுகளை நமக்கு சூழ்நிலைகள் மூலமாக தருகிறது.

நல்லெண்ணத்துக்கு நல்ல விளைவும், தீய எண்ணத்துக்கு தீய விளைவும் ஏற்படும் எனபது உண்மை.

நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.

ஆகவே தான் நமது முன்னோர்கள் நாம் எப்போது நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.

அதற்கு ஒரே வழி அருட்தந்தை கூறிவது போல் நல்ல எண்ணங்களை விரும்பி முயன்று மனதில் இருத்த வேண்டும்.

தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம்.

பயிற்சியினால் எதுவும் முடியும்.

0 கருத்துரை இடுக ...: