சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது. 
டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை. 
சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது. 
அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், நிறுத்தாமல் தொடர்ந்து இரைந்து கொண்டே இருந்த டாக்ஸி ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைத்து "சென்று வாருங்கள்" என்று சைகை செய்தார். இப்போது டாக்ஸி டிரைவர் மூச்சடைத்துப் போய் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 
அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் எனக்கும் கூட பேசாமலேயே ஏதோ உணர்த்தியது போல இருந்தது, 
"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."
இந்த உண்மை அனைவருக்கும் புரிந்தால் இன்று எத்தனை பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து போய் இருக்கக் கூடும்?
அப்போது அவருக்கு நான் கூட ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. 
எனது சிந்தனை
சமுக  தொண்டே எனது பசியை போக்கும் என்று உணர்ந்த நான் பொது தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மொழி, இனம் இவைகள் மனிதர்களை பிரிக்கும் ஒரு கருவியாக இருப்பதால் அவற்றிற்கு   முக்கியத்துவம்  கொடுக்காமல் மனிதநேயத்தினை சிந்திக்கிறேன்.
என்னைப் பற்றி !
இன்றைய சிந்தனை
வலைப்பூவின் வாசனைகள்
- 
▼ 
2009
                                (20)
                              
- 
▼ 
May
                                (18)
                              
- கண்ணதாசனும் - கருணாநிதியும்
 - என்ன கொடும சார் இது?.....
 - மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
 - படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
 - என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அட...
 - சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...
 - என் மீது எந்தக் குற்றமுமில்லை
 - பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே
 - ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும்
 - நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
 - பென்சில் ஓவியங்கள் - ஹீரோக்களின் முகங்கள்
 - விழுந்து விழுந்து சிரிங்க ....
 - பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றி...
 - கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !
 - ஒரு சிரியஸ் கதை : கட்டாயம் படிக்கவும்
 - மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்ற...
 - இந்த குழந்தைகளின் முகங்களை பார்க்கும்போது உண்டாகும...
 - சத்தியமா சொல்றேன் ....இது நம்ம ஊரு மெரீனா கடற்கரைத...
 
 
 - 
▼ 
May
                                (18)
                              
 
பக்கங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
                          
0 கருத்துரை இடுக ...:
Post a Comment